இந்தியாவில் 13 வது ஐசிஐசிஐ உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும்.
இதில் இந்திய அணி - ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று இந்திய அணி இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட இருக்கிறது. புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெற இந்தியாவிற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.