வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் அனுப்பி உள்ளதாக தகவல்

June 26, 2024

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து கணிசமான தொகை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து 2வது ஆண்டாக, 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ள மொத்த நிதி 107 பில்லியன் டாலர்களாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்க வாழ் இந்தியர்களிடமிருந்து அதிகமான தொகை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. மொத்த தொகையில், 23% அமெரிக்காவிலிருந்து […]

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து கணிசமான தொகை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து 2வது ஆண்டாக, 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ள மொத்த நிதி 107 பில்லியன் டாலர்களாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்க வாழ் இந்தியர்களிடமிருந்து அதிகமான தொகை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. மொத்த தொகையில், 23% அமெரிக்காவிலிருந்து வந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. அதே சமயத்தில், வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி குறைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu