இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு வெற்றிகர பரிசோதனை

இந்திய கடற்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எம்எச்-60 ‘ரோமியோ’ மல்டி- மிஷன் ஹெலிகாப்டர் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கிய சாதனையை இந்திய கடற்படை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட ‘டார்பிடோ’ எனும் நீருக்கடியில் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் நீர்மூழ்கி குண்டு சோதனை நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை […]

இந்திய கடற்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எம்எச்-60 ‘ரோமியோ’ மல்டி- மிஷன் ஹெலிகாப்டர் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கிய சாதனையை இந்திய கடற்படை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட ‘டார்பிடோ’ எனும் நீருக்கடியில் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் நீர்மூழ்கி குண்டு சோதனை நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அந்த குண்டு துல்லியமாக தாக்கி அழித்தது. இது இந்திய கடற்படை மற்றும் டிஆர்டிஓ-வின் குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை நிகழ்வாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu