இந்திய கடற்படை 26 ரபேல் போர் விமானங்களையும் 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்களையும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் என தகவல்.
டெல்லியில் நடந்த வருடாந்திர கடற்படை நாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்திய கடற்படை தளபதி தினேஷ் கே. திரிபாதி கூறியதாவது, அடுத்த மாதத்திற்குள் ரபேல் விமானங்கள் மற்றும் 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். இந்த ஒப்பந்தம் ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பில் நடைபெறவுள்ளது. இந்திய கடற்படை பிரான்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 26 ரபேல் வகை போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான முயற்சியில் இருக்கிறது. மேலும், மஜகாவன் கப்பல் கட்டும் நிறுவனத்தில் 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்களை கட்டவும் பிரான்ஸ் கடற்படை குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது, இந்திய கடற்படை சீன கடற்படையை இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.