கொழும்பு துறைமுகத்தில் சீன மற்றும் இந்திய கடற்படை கப்பல்கள் வந்துள்ளன.
சீன கடற்படையின் 3 போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் 'ஐ.என்.எஸ். மும்பை' போர்க்கப்பல் 3 நாள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது. இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு இந்திய கப்பல் செல்வது இது 8வது முறையாகும். 163 மீட்டர் நீளமுடைய இக்கப்பலில் 410 ஊழியர்கள் உள்ளனர். இந்த 3 நாள்களில், ஊழியர்கள் இலங்கையை சுற்றிப் பார்ப்பது மற்றும் இலங்கை கடற்படையுடன் சேர்ந்து யோகா மற்றும் கடற்கரையை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். பின்னர் 29-ஆம் தேதி கப்பல் இந்தியா புறப்படும் என கூறப்பட்டுள்ளது.