மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கம் பெற்று உலக சாதனை படைத்துள்ளனர்.சீனாவில் ஹாங்சேவ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பார விளையாட்டுப் போட்டி மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுமித் அன்டில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதில் அவர் தனது முந்தைய உலக சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதனை அடுத்து இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
இதேபோல் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அடுத்ததாக ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அன்கூர் தாமா தங்கப் பதக்கம் வென்றார். இவர் இதற்கு முன்னதாக ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய பாரா விளையாட்டில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ரக்ஷிதா ராஜூ, கிலகா லலிதா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர். இந்தியா தற்போது பதக்கப் பட்டியலில் 64 பதக்கங்களுடன் ஆறாவது இடம் வகிக்கிறது. சீனா 300 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது.