இந்திய ரெயில்வே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஹைட்ரஜன் ரெயில்கள் தொடங்க உள்ளது.
இந்திய ரெயில்வே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஹைட்ரஜன் ரெயில்களை அறிமுகப்படுத்த வருகிறது. இந்த ரெயில்கள், இயங்கும்போது நீராவி மட்டுமே வெளியேறும் வகையில் செயல்படுகின்றன, அதனால் எந்த மாசும் ஏற்படாது. முன்னதாக ஜெர்மனியில் இதனை 2018-ல் பயன்படுத்தத் தொடங்கினர். இந்நிலையில் இந்தியாவில், முதலில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ஹரியானாவில் இந்த ரெயில் இயக்கப்படும். 1 மணி நேரத்திற்கு 40,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவதாகவும், ரெயில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 35 ரெயில்கள் முதன்முதலாக இயக்கப்பட உள்ளன.