பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை தெரிவித்த இந்திய விஞ்ஞானி கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இந்திய ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு தெரிவிப்பதாக இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விஞ்ஞானியை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர். இதில் அவர் வீடியோ கால் மூலமும், வாட்ஸ் அப் சாட்டிங் வாயிலாகவும் பாகிஸ்தான் உளவாளிகளுடன் பேசியது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது ராணுவ ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.