லண்டனில் உள்ள பேருந்து நிலையத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு லண்டனில் பேருந்துக்காக காத்திருந்த 66 வயது மதிக்கத்தக்க அனிதா முகே என்ற பெண்ணை, 22 வயது மனிதர் ஒருவர் அடித்துக் கொலை செய்துள்ளார். கத்தி போன்ற ஆயுதத்தால் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் ஏற்பட்டதில் அனிதா முகே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிதா முகே, லண்டனில் பகுதி நேரமாக சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். பேருந்துக்காக காத்திருந்த அவரை குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் தாக்கினார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சந்தேகத்தின் பெயரில் தேபெல்லா என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.