குரேஷியா நாட்டின் தலைநகரான ஜாக்கிரேப்பில் நடைபெற்று வரும் ஜாக்கிரப் ஓபன் மல்யுத்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அமன் ஷெராவத் தங்கப்பதக்கம் வென்று உள்ளார்.
குரேஷியாவில் ஜாக்கிரப் ஓபன் மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 57 கிலோ எடை பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அமன் ஷெராவத் உலகத் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள சீனாவின் வான்ஹாவோ சூ வை 10-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். முன்னர் நடைபெற்ற முதல் தரவரிசையில் அமன் ஷெராவத் துற்கியின் முகமது கரவுசை 15-4 என்ற கணக்கிலும், கால் இறுதியில் அமெரிக்காவின் ரிச்சர்டு ஜேன் ரே ரோட்சை 11-0 என்ற புள்ளி கணக்கிலும், அரை இறுதியில் ஜார்ஜியா ரா திங்காஷ்விலியை 11-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.














