என்டிடிவியை அதானி குழுமம் கையகப்படுத்தியதில் இருந்து, நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், என்டிடிவி அதிபர் சுபர்ணா சிங் உட்பட சில மூத்த அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, என்டிடிவியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹரிஜித் சட்டர்ஜி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கவால்ஜித் சிங் பேடி ஆகியோர் வெளியேறி உள்ளனர். முன்னதாக, நிறுவனத்தின் தோற்றுநர்கள் பிராணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் வெளியேறினர். மற்றும், மூத்த அதிகாரியான ரவீஷ் குமார் பதவி விலகினார்.
நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்தது தொடர்பாக, என்டிடிவி சமர்ப்பித்துள்ள ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “புதிய தலைமை குழு உருவாக்கப்பட்டு, நிறுவனத்தை புதிய பாதையில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.