இண்டிகோ நிறுவனத்தின் இணை தோற்றுனர்களான கங்குவால் குடும்பத்தினர், பிளாக் டீல் எனப்படும் பங்குச் சந்தை பரிவர்த்தனை மூலம் நிறுவனத்தின் பங்குகளை விற்று உள்ளனர். இதன் காரணமாக, இண்டிகோ பங்கு விலையில் 4% சரிவு காணப்பட்டது. மும்பை பங்கு சந்தையில் இண்டிகோ பங்குகள் 4.34% சரிந்து, ஒரு பங்கு 2425 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
கங்குவால் குடும்பத்தினர் தங்கள் வசம் இருந்த 4% பங்குகளை விற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ராகேஷ் கங்குவால் மற்றும் சோபா கங்குவால் ஆகியோர் பங்குகளை விற்றுள்ளனர். இவற்றை, மார்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஜேபி மோர்கன் ஆகிய நிறுவனங்கள் நிர்வகித்துள்ளன. இதன் மதிப்பு 450 மில்லியன் டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 3370 கோடி ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட ஒரு பங்கு 2400 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது திங்கட்கிழமை பதிவான இண்டிகோ நிறுவனத்தின் பங்கு விலையை விட 5.8% சலுகை விலை ஆகும்.