வடக்கு சுமத்ரா மாகாணத்தில் மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகருக்கான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பரவியது. இதன் காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகருக்கான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுற்றுலா பேருந்து மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் விழுந்தன. இதில் பேருந்தில் இருந்த டிரைவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்திருந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். வடக்கு சுமத்ரா காவல்துறையின் போக்குவரத்து இயக்குனர், நிலச்சரிவில் பல வாகனங்களில் மக்கள் சிக்கியிருப்பதாக கூறினார்.