இந்தோனேசியா - ஒரே ஆண்டில் பல முறை வருகை செய்ய அனுமதிக்கும் விசா மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது

November 29, 2022

இந்தோனேசியாவில், கொரோனா பரவல் காரணமாக, ஒரே ஆண்டில் பலமுறை வருகை செய்ய அனுமதிக்கும் விசா நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விசா நடைமுறை மீண்டும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குடியேற்ற துறை செயல் நிர்வாகி தெரிவித்துள்ளார். ‘மல்டிபிள் என்ட்ரி விசா’ எனப்படும் இந்த விசாவை பெற்றால், ஒரே ஆண்டில் பலமுறை இந்தோனேசிய பயணம் மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனியாக விசா எடுக்க தேவையில்லை. அத்துடன், ஒவ்வொரு பயணத்தின் போதும், அதிகபட்சமாக 60 நாட்கள் வரை […]

இந்தோனேசியாவில், கொரோனா பரவல் காரணமாக, ஒரே ஆண்டில் பலமுறை வருகை செய்ய அனுமதிக்கும் விசா நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விசா நடைமுறை மீண்டும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குடியேற்ற துறை செயல் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

‘மல்டிபிள் என்ட்ரி விசா’ எனப்படும் இந்த விசாவை பெற்றால், ஒரே ஆண்டில் பலமுறை இந்தோனேசிய பயணம் மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனியாக விசா எடுக்க தேவையில்லை. அத்துடன், ஒவ்வொரு பயணத்தின் போதும், அதிகபட்சமாக 60 நாட்கள் வரை இந்தோனேஷியாவில் தங்கிக் கொள்ள முடியும். இந்தோனேசியாவின் ரியா தீவில் இந்த விசாதாரர்கள் வருகை தந்து, நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகுந்த பயனடைவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu