இன்போசிஸ் நிறுவனத்தின் அதிபராக மோகித் ஜோஷி பணியாற்றி வந்தார். நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணி செய்த பின்னர் விலகிய அவர், தற்போது டெக் மஹிந்திராவில் இணைந்துள்ளார். டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில், டெக் மஹிந்திராவின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி சி பி குருநாணி வரும் டிசம்பர் மாதம் பணி ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மோஹித் ஜோஷியின் பதவிக்காலம் டிசம்பர் 20, 2023 முதல் டிசம்பர் 19, 2028 வரை கூறப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக வெளியேறி வருவது பேசு பொருளாகியுள்ளது. முன்னதாக, வெளியேறிய ரவிகுமார், காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தற்போது, மோகித் ஜோஷி வெளியேறி, டெக் மஹிந்திரா உயர் பதவியில் பணியாற்ற உள்ளார்.