கோடையை சமாளிக்க பேருந்து ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி பொருத்தும் பணி தொடக்கம்

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, அரசு பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுநர் இருக்கைக்கு மேலே மின்விசிறி பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஓ ஆர் எஸ் தண்ணீர் வழங்குவது, பணிமனைகளில் குடிநீர் வசதியை உறுதி செய்வது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, 1000 மாநகர பேருந்துகளில் மின்விசிறி பொருத்த […]

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, அரசு பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுநர் இருக்கைக்கு மேலே மின்விசிறி பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஓ ஆர் எஸ் தண்ணீர் வழங்குவது, பணிமனைகளில் குடிநீர் வசதியை உறுதி செய்வது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, 1000 மாநகர பேருந்துகளில் மின்விசிறி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணியின் பகுதியாக, 250 பேருந்துகளில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து மாநகர பேருந்துகளிலும் மின்விசிறிகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu