உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான பணியிடங்களை குறைக்கும் திட்டத்தில் ஈடுபட உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், உலகளவில் பணியாளர் எண்ணிக்கையை 5% அளவில் குறைத்த இன்டெல், 2025 ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர்கள் வரை செலவுகளை குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இயங்கும் இன்டெல் நிறுவனத்தில் சுமார் 13,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் பணியிழப்புகள் இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.