பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று பாராளுமன்றத்தில் இடைக்காலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆண்டின் முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தலுக்குப் பின்னர் அமையும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














