பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில், 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்திய ராணுவத்தின் விமான கண்காட்சி இதுவரை 14 தடவைகள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு, விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெறுகிறது.
10-ந்தேதி தொடங்கும் இந்த கண்காட்சி 14-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன, இது பார்வையாளர்களுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவத்தை அளிக்கும்.