ஆவின் புதிய மூலிகை வகை பால் வகைகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளன.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) தற்போது தினசரி 35 லட்சம் லிட்டருக்கு மேல் பாலை கொள்முதல் செய்து, ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறது. வெண்ணெய், நெய், தயிர், மோர் போன்ற 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் 27 ஒன்றியங்கள் மூலம் விற்கப்படுகின்றன. புதிய வகையாக மூலிகை சேர்க்கப்பட்ட பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகியவற்றின் அறிமுகத்திற்கு முன், தொழில்நுட்ப குழு ஆராய்ச்சி செய்கிறது. ரோஸ் மில்க் போல், இவை தேவை மிக்க இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என ஆவின் தெரிவித்துள்ளது.