டாஸ்மாக் மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்து வந்தது. இதற்காக டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்யும் வசதி ஏற்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பெயரில் தமிழகம் முழுவதும் இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அவ்வகையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில் பேடிஎம், கியூ ஆர் கோடு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பணப்பறிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் சுமார் 1000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்குள்ள பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை என தெரிய வந்துள்ளது. விரைவில் இங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.