பழனி மலை கோவிலில் க்யூ.ஆர்.கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மலைக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மூலம் செலுத்தி வருகின்றன. இங்கு நாள்தோறும் அன்னதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதில் சாதாரண நாட்களில் 8000 பேரும் விழா நாட்கள் 30000 பேர் வரையிலும் உணவருந்தி செல்கின்றனர். பல்வேறு விஷயங்களுக்காக பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் க்யூ.ஆர்.கோடு வசதியின் மூலம் காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து தைப்பூச திருவிழா நெருங்கி வரும் வேலையில் பழனி மலை கோவில் க்யூ.ஆர்.கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது