ஆண்டுதோறும் குடியரசு தின விழா டெல்லியில் உள்ள ராஜபாதையில் மத்திய அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த முறை இது சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்டு கடமை பாதையில் கொண்டாடப்பட்டது. இதில் ஜனாதிபதி கொடியை ஏற்றி விழாவை சிறப்பித்தார். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்களை வரவழைத்து குடியரசு தின விழா கொண்டாடுவது வழக்கமாகும். அதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு 75 வது குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.














