ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றில் இரண்டாவது அணியாக பஞ்சாப் அணி வெளியேறியது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப், பெங்களூர் அணிகள் மோதியது. இதில் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. அதனால் இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றில் இருந்து பஞ்சாப் அணி வெளியேறியது














