ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த போராட்டத்தின் எதிரொலியாக, கலாச்சார கண்காணிப்பு காவல் பிரிவு கலைக்கப்படுவதாக ஈரான் நீதித்துறை அறிவித்துள்ளது.
ஈரான் நாட்டில், இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பை உறுதி செய்ய, ‘கலாச்சார கண்காணிப்பு காவல் பிரிவு’ செயல்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதம், முறையாக ஹிஜாப் அணியவில்லை என்பதால் மாஷா அமினி என்ற பெண் இந்த காவல் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தீவிரமாக தாக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம், நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில், ஹிஜாப் எதிர்ப்பு மக்கள் போராட்டம் கவனம் பெற்றது.
இந்நிலையில், அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகமது ஜாபர் மொண்டோசரி, கலாச்சார கண்காணிப்பு காவல் பிரிவு கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.