இந்தியா உட்பட 33 நாடுகளின் சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு விசா தேவை இல்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது.
ஈரான் நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுற்றுலாத்துறை மந்திரி சர்க்காமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஈரானின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியா உட்பட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவை இல்லை என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்தார். ஏற்கனவே கென்யா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா பெறுவதில் இருந்து விலக்கு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.














