ஈரான் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. ஈரான் நாட்டின் சபாநாயகர், முன்னாள் அதிபர் ஆகியோரும் போட்டியில் களமிறங்கினர். ஆனால், ஈரான் முன்னாள் அதிபர் முகமது அகமதி நிஜாத்துக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 19ஆம் தேதி, ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். எனவே, புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. ஈரான் முன்னாள் அதிபர் அகமதி, இந்த முறை அதிபர் போட்டியில் களமிறங்குவதாக கூறினார். ஆனால், ஈரான் நாட்டு சட்டப்படி, தொடர்ந்து 2 தடவை அதிபர் பொறுப்பில் இருந்தவர், 3 வது முறையாக தேர்தலில் போட்டியிட முடியாது. அதன்படி, கடந்த 2005 முதல் 2013 வரை அகமதி அதிபராக இருந்ததால், இந்த தேர்தலில் அவர் போட்டியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரைத் தவிர்த்து 6 பேர் அதிபர் தேர்தலில் களம் காண்கின்றனர்.