ஈரான் நாட்டில் ஆடைக் கட்டுப்பாடு மீண்டும் கடுமை படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெண்கள் முறையாக ஹிஜாப் அணியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.பொது இடங்களில் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும். முறையாக ஹிஜாப் அணியாத பட்சத்தில், 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். மேலும், இந்திய மதிப்பில் 3.5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். சர்ச்சைக்குரிய இந்த ஆடைக் கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு குரல்களும் ஒலித்து வருகின்றன.