கடந்த வாரம் ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே தீவிர மோதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இருநாட்டு தூதர்களும் திருப்பி அழைக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது, தூதர்களை மீண்டும் பணியில் அமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தங்கள் தூதர்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அண்மையில், இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்துரையாடி இந்த முடிவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலில் அப்பாஸ் ஜிலானியின் அழைப்பை ஏற்று, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் பாகிஸ்தான் வருகை தர உள்ளார். வரும் 29ஆம் தேதி அவர் வருகை புரிவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.