இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தளங்களின் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.
மேலும், ஈரானின் பொருளாதாரத்தை பாதிக்க எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னெட், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க இது சரியான வாய்ப்பு என்றும், தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதே சமயம், ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் பேசிய ஜோ பைடன், இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு இருப்பதாக கூறினார். ஆனால் ஈரானின் அணுதளங்கள் மீதான தாக்குதலுக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என்றார். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து, ஈரானுக்கு எதிரான பதில் தாக்குதலில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளன. மேலும் இஸ்ரேல் புதிய தாக்குதலுக்கு 'வழக்கத்திற்கு மாறான பதிலடி' கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.