ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை வேண்டாம் என வலியுறுத்தினார்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் நீண்ட காலமாக நீடிக்கிறது. 2018ல், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடன் உள்ள அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்தது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள டிரம்ப், அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது அதிக அழுத்தம் செலுத்த உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில், டெஹ்ரானில் நடந்த கடற்படை நிகழ்ச்சியில் ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை வேண்டாம் என வலியுறுத்தினார். "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை புத்திசாலித்தனமானதாகவோ, கவுரவமானதாகவோ இருக்காது" என அவர் கூறினார்.