ஈராக்கில் ஓரின சேர்க்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகள் ஓரின திருமணத்திற்கு ஆதரவளித்து வரும் நிலையில், அதற்கு எதிரான நாடுகளில் ஒன்றாக ஈராக் உள்ளது, இதனை எதிர்த்து ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து எம்பிக்கள் வாக்களித்தனர். ஓரினச்சேர்க்கை, விபச்சாரம் போன்றவை குற்றமாக அறிவிக்கப்பட்டு பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவுடன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஓரின சேர்க்கையாளர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. மேலும் விபச்சாரத்திற்கு சிறை தண்டனை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்களுக்கு தண்டனை போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரின சேர்க்கை மற்றும் விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்பே ஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு அமெரிக்கா போன்ற பிற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சட்டமானது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில சமூக அமைப்புகள் கூறியுள்ளன. இந்த சட்டம் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் என்று ஈராக் அரசு கூறுகிறது.