இஸ்ரேலில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஈராக் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள ஹைபா நகரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்த ஆலை தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் எதுவும் வரவில்லை. இந்த தாக்குதல் அங்கு உள்ள இரண்டு ராணுவ நிலைகள் மீது குறிவைக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈராக்கை தளமாக கொண்டு செயல்படும் கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ஈராக் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அஞ்சப்படுகிறது.