ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி தளம் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது. எனவே, ரயில் டிக்கெட் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஐ ஆர் சி டி சி யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி அளவில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், ஐஆர்சிடிசி வலைதளம் மற்றும் செயலியை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், டவுன் டிடெக்டர் தளமும் ஐ ஆர் சி டி சி முடக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. ஐ ஆர் சி டி சி தளத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் டிக்கெட் சேவைகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.