அயர்லாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வராத்கர் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார்.
அயர்லாந்து நாட்டில், கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், மைக்கேல் மார்டின் கட்சியும் லியோ வராத்கர் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. பிரதமர் பதவியை இரு தலைவர்களும் சுழற்சி முறையில் ஏற்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, 2 ஆண்டுகளாக மைக்கேல் மார்டின் அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்று இருந்தார். இன்று முதல் லியோ வராத்கர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ, கலப்பு பிரிவை சேர்ந்தவராவார். மேலும், தன் பாலின சேர்க்கையாளராக தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2017 முதல் 2020 வரை, அயர்லாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக இருந்தார்.