இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொசாத்துக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு, ஈரானில் ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் நாட்டைச் சேர்ந்த சிலர், இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பிடம் இருந்து கிரிப்டோ கரன்சி முறையில் பணம் மற்றும் ஆயுதங்களை பெற்று உளவு வேலையில் ஈடுபட்டு வந்தது ஈரான் ராணுவ விசாரணையில் தெரிய வந்தது. அவர்களில் 4 பேருக்கு, நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும், மூவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் எதிரி நாடுகள் ஆகும். உளவு பார்ப்பது, அணு ஆயுதங்களை விற்பது போன்ற நடவடிக்கைகளில் பரஸ்பரமாக எதிரி நாட்டுக்கு பாதகமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.