மோப்ப சக்தி மூலம் நோய்களை கண்டறியவல்ல ரோபோக்களை இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உலகிலேயே முதல் முறையாக உயிரி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோவாக இது அறியப்படுகிறது. வெட்டுக்கிளிகள் தங்கள் உணர்கொம்புகள் துணையுடன் பொருளை அடையாளம் காணுவது போல, உணர்கருவியின் (சென்சார்) துணையுடன் இந்த ரோபோக்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ரோபோவை தயாரித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் உணர்கருவி பொருத்தப்பட்டு மோப்ப சக்தி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நோய்களை கண்டறிவது, பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்வது போன்றவற்றை செய்ய முடியும் என இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.