பெய்ரூட்டின் வடக்கே உள்ள பெயில் மாவட்டத்தில் உள்ள ஆல்மேட் நகரமும் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல், நேற்று மதியம் லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் வான்வழி தாக்குதலை முன்னெடுத்தது. இந்த தாக்குதல் பால்பெக் மற்றும் பெகா பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை இலக்கு வைத்து நடந்தது. பலர் உயிரிழந்தனர். மேலும் பெய்ரூட்டின் வடக்கே உள்ள பெயில் மாவட்டத்தில் உள்ள ஆல்மேட் நகரமும் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.
2023 ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே தொடரும் மோதலின் முடிவாக, லெபனானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,189 ஆகவும், காயமடைந்தவர்கள் 14,078 எனவும் உள்ளது.