கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் நேற்று மீட்கப்பட்டார்.
தெற்கு இஸ்ரேலிலுள்ள ஒரு குடோனில் காவலாளியாக வேலை செய்து வந்த ரஹத்துப் பின்புலக் கிராமத்தைச் சேர்ந்த அல் கலடியை ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி துப்பாக்கி முனையில் கடத்தியது. இந்நிலையில் நேற்று காசா முனையிலுள்ள ரபா நகரில் நிலத்தடி சுரங்கத்தில் வைத்து அல் கலடியை மீட்டனர் இஸ்ரேலிய படையினர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, ஹமாஸ் பிடியில் 110க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.