லெபனான் ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்து லெபனான் ராணுவம் கூறுகையில், மூன்று இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வாகன அணிவகுப்பை குறி வைத்து குண்டுகள் வீசப்பட்டதாகவும் கூறியுள்ளது. எனினும் இந்த தாக்குதலில் யாரும் உயிர் இழக்கவில்லை.
காசா போரில் ஹமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது.