இஸ்ரேல் போர் காரணமாக டெல்லியில் அசம்பாவிதங்கள் நடக்கும் என கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேலில் நடைபெறும் போர் டெல்லியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வந்து போராட்டம் நடத்துவதற்கு சில அமைப்புகள் முனைந்துள்ளன. இதனால் சில இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இஸ்ரேல் தூதரகம் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைப்போல யூத நிறுவனங்கள் அருகிலுள்ள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்னும் பல முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.














