இஸ்ரேல் சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 36 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 இஸ்ரேலியர்களை பணயமாகக் கைப்பற்றிய ஹமாஸ், காசா முனைக்கு கொண்டு சென்றது. இஸ்ரேல், போரின் விளைவாக 117 பணய கைதிகளை மீட்டதாக கூறியுள்ளது. மேலும் கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசமுள்ளவர்கள் என்றும், பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த போர் காசாவில் 43,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் ஆதரவாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு தாக்குதல்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் விளைவாக, இஸ்ரேல் சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 36 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.