ரபாவில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தியதில் 45 பேர் பலியாகியுள்ளனர்.
காசா பகுதியில் உள்ள ரபா நகரில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தியதில் 45 பேர் பலியாகியுள்ளனர். காசா மையப் பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தல் அல் சுல்தான் பகுதியில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். சுமார் 1000 பேர் உள்ள இந்த முகாமில் ஞாயிறன்று இரவு இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் அந்த முகாம் முழுவதுமாக தீக்கிரையானது. இதில் 45 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் இரண்டு ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.