இஸ்ரேல் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 8 பேர் பலியாகினர்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனிய போராளி குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் ஜெனின் நகரில் போராளி குழுக்கள் சிலர் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. மேலும் இஸ்ரேல் ராணுவத்தினர் அவர்கள் பதுங்கி இருந்த முகாம்கள் மீது நள்ளிரவு டிரோன் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் தாக்குதல் நடைபெற்ற அந்த தெருக்களில் கரும்புகை எழுந்ததாகவும், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசாங்கமும், அண்டை நாடான ஜோர்டானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.