காசாவில் தவறுதலாக 3 பிணைக்கைதிகள் சுட்டுக்கொலை - இஸ்ரேல் ராணுவம்

December 16, 2023

காசா போரில் தவறுதலாக மூன்று பிணை கைதிகளை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே தெற்கு காசா பகுதியில் கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இங்கு ஷெஜையா என்ற பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வந்தது. அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும் அவர்களுக்கும் இடையே நேரடி சண்டை நடைபெறுகிறது. இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தவறுதலாக மூன்று பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் […]

காசா போரில் தவறுதலாக மூன்று பிணை கைதிகளை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே தெற்கு காசா பகுதியில் கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இங்கு ஷெஜையா என்ற பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வந்தது. அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும் அவர்களுக்கும் இடையே நேரடி சண்டை நடைபெறுகிறது. இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தவறுதலாக மூன்று பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், நேற்று தவறுதலாக மூன்று பிணை கைதிகளை நாங்கள் சுட்டுக் கொன்றோம். அவர்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் தருவதாக தவறுதலாக எண்ணி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு பிற வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தவறு நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu