இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். மத்திய காசா பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 20 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு, ஹமாஸ் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதலாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது. இந்த தாக்குதலின் போது, இஸ்ரேல் பீரங்கி மீது ஹமாஸ் ஏவுகணை பாய்ந்து மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். அவர்கள், கட்டிடத்தின் உள்ளே வெடி பொருட்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததால், இழப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில், இதுவரை 25295 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.