இன்று 3 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி டி2

February 10, 2023

இன்று காலை, ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து 3 செயற்கை கோள்களுடன் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ராக்கெட் மூலம் குறைந்த செலவில் விண்வெளி செயற்கைக்கோள் திட்டங்களை செயல்படுத்த முடிவதாக தெரிவித்துள்ளனர். சிறிய செயற்கை கோள்களை சுமந்து, குறைந்த தூர சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி என்ற ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியது. இதில் 550 கிலோ கிராம் […]

இன்று காலை, ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து 3 செயற்கை கோள்களுடன் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ராக்கெட் மூலம் குறைந்த செலவில் விண்வெளி செயற்கைக்கோள் திட்டங்களை செயல்படுத்த முடிவதாக தெரிவித்துள்ளனர்.

சிறிய செயற்கை கோள்களை சுமந்து, குறைந்த தூர சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி என்ற ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியது. இதில் 550 கிலோ கிராம் எடை வரை சுமந்து செல்ல முடியும். இந்நிலையில், இன்று EOS-07, Janus-1 மற்றும் AzaadiSAT-2 ஆகிய 3 செயற்கைக்கோள்கள் சுமந்து செல்லப்பட்டு, பூமியிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன. இதன் மொத்த எடை 175.2 கிலோ கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. EOS-07 மட்டுமே 156.3 கிலோகிராம் எடை கொண்டு முக்கிய சுமை பாகமாக விளங்குகிறது. Janus-1 மற்றும் AzaadiSAT-2 ஆகியவை முறையே 10.2 மற்றும் 8.7 கிலோ கிராம் எடை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பயணத்தை தொடங்கிய 13-வது நிமிடத்தில் EOS-07 வெளியேற்றப்படும் எனவும், அதன் பின்பு வரிசையாக மற்ற 2 செயற்கை கோள்களும் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu