அடுத்த 5 ஆண்டுகளில், 50 செயற்கைக்கோள்களை செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஏவப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இந்தியாவுக்கு சொந்தமாக உள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை வெறும் 54. மிகவும் உயரமான இலக்குகளை எட்ட துடிக்கும் இந்திய நாட்டுக்கு, இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியாவின் கனவுகளை நினைவாக்க, தற்போதைய நிலையை விட 10 மடங்கு கூடுதலான செயற்கைக்கோள்கள் தேவை. குறிப்பாக, புவி கண்காணிப்பு சார்ந்த கட்டமைப்புகளை வலுப்படுத்தும் துறையில் அதிக செயற்கைக்கோள்கள் வேண்டும். எனவே, அடுத்த 5 ஆண்டுகளில், 50 செயற்கைக்கோள்களை நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது” என்று கூறினார்.