சென்னையில் மூன்றாவது மிகப்பெரிய ரயில் முனையமாக செயல்பட்டு வரும் தாம்பரம் ரயில் நிலையம் உலகத்தர அளவில் மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தாம்பரம் ரயில் நிலையம் மூன்றாவது பெரிய ரயில் முனையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினம் தோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கிருந்து திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் இதனை ஆயிரம் கோடி செலவில் உலக தரத்தில் மறுசீரமைக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ரயில் நிலையத்தில் கழிவறைகள், டிஜிட்டல் பலகைகள், புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சீரமைக்கப்பட உள்ளன. இதற்கான திட்டம் ஐந்து வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் தொடங்கப்பட உள்ளன.