30 ஆவது காவிரி மேலாண்மை கூட்டம் மே 21 ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 29 கூட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே 21ஆம் தேதி 30-வது கூட்டம் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் தலைமையில் கூடுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா,கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது